twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேலைக்காரர்களுக்கு வீடு கட்டித் தருவதுடன் 2 சக்கர வாகனங்கள் கொடுத்த அஜீத்

    By Siva
    |

    சென்னை: அஜீத் குமார் தனது வீட்டில் நீண்ட காலமாக பணியாற்றுபவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோடு அவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களும் வாங்கி கொடுத்துள்ளாராம்.

    அஜீத் குமார் தனது வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் டிரைவர், தோட்டக்காரர், சமையல்காரர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவரவர் பெயரில் நிலம் வாங்கிக் கொடுத்தார்.

    இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வீடு கட்டுகிறார்

    வீடு கட்டுகிறார்

    ஊழியர்களுக்காக வாங்கிய இடத்தில் அவர்களுக்காக அஜீத் குமார் தனது சொந்த செலவில் வீடும் கட்டிக் கொடுக்கிறார்.

    கட்டுமானப் பணி

    கட்டுமானப் பணி

    கேளம்பாக்கத்தில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அஜீத் ஷூட்டிங்கில் இருந்ததால் அடிக்கல் நாட்டும் விழாவில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார்.

    2 சக்கர வாகனங்கள்

    2 சக்கர வாகனங்கள்

    தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார் அஜீத்.

    வீரம்

    வீரம்

    அஜீத் தற்போது வீரம் படத்தில் நடித்து வருகிறார். வீரம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ajith Kumar is constructing houses to the people who work in his house for more than 10 years. Besides this he has given two wheelers to them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X