கே பாலச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்!
திரையுலகின் பிதாமகன் என்று போற்றப்பட்ட கே பாலச்சந்தரின் உடலுக்கு திரையுலகமே ஒட்டு மொத்தமாகத் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது. ஆனால் இந்த நிகழ்வுக்கு நடிகர் அஜீத் வராதது பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது.
ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், விஜயகாந்த், நெப்போலியன், சரத்குமார் என இன்றைய, நேற்றைய தலைமுறை கலைஞர்கள் அத்தனை பேரும் பாலச்சந்தர் வீட்டுக்குப் போய் அஞ்சலி செலுத்தினர். மின் மயானத்துக்கும் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
ஆனால் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான அஜீத் இந்த நிகழ்வு எதிலுமே கலந்து கொள்ளவில்லை.

பொதுவாகவே அஜீத் தனது படங்களின் நிகழ்ச்சிகள், திரையுலக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. அதை ஒரு கொள்கையாகவும் வைத்திருக்கிறார்.
அதே நேரம் ஒரு சாமானிய ரசிகன் வீட்டுத் துயரம், நிகழ்ச்சி என்றாலும் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் போய் நிற்பது அவரது வழக்கம்.
கே பாலச்சந்தர் நிகழ்வுக்கு அஜீத் வரமுடியாமல் போனதன் காரணம் தெரியவில்லை. அதே நேரம் இதுபற்றி திரையுலகம் பேசுவதையும் வெளியில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











