நள்ளிரவில் 2 பேர் வீட்டுக்குள் புகுந்து ரகளை செய்தும் புகார் கொடுக்காத அஜீத்
சென்னை: தனது வீட்டுக்கு 2 வாலிபர்கள் குடிபோதையில் நள்ளிரவில் வந்து ரகளை செய்தும் அவர்கள் மீது நடிகர் அஜீத் குமார் புகார் கொடுக்கவில்லை. இதனால் தான் அவர்கள் இருவரையும் போலீசார் விடுவித்தனர்.
அஜீத் குமாரின் வீடு சென்னை திருவான்மியூர் சீ வேர்டு சாலையில் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு 2 மர்ம நபர்கள் அஜீத்தின் வீட்டு கேட்டை தட்டினர். தாங்கள் அஜீத்தின் ரசிகர்கள் என்றும், அவரை சந்திக்க வந்ததாகவும் கூறி ரகளை செய்தனர்.

அஜீத் வீட்டில் இல்லை காலையில் வாருங்கள் என்று காவலாளி கூறியும் அவர்கள் அதை காதில் வாங்காமல் கத்தி கூச்சலிட்டனர். இந்நிலையில் அஜீத் காரில் வந்ததைப் பார்த்த அந்த 2 பேரும் காரின் பின்னாலேயே வீட்டுக்குள் நுழைந்தனர். இந்நிலையில் இது குறித்து தகவல் கிடைத்த திருவான்மியூர் போலீசார் அஜீத்தின் வீட்டுக்கு வந்து அந்த 2 பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
நள்ளிரவில் தனது வீட்டில் 2 குடிகாரர்கள் கலாட்டா செய்தும் அஜீத் குமார் அவர்கள் மீது புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் போலீசார் அந்த இருவரையும் விடுவித்தனர். இது அஜீத்தின் அரிய குணத்தை காட்டுகிறது.
அவர் நினைத்திருந்தால் அவர்கள் மீது புகார் கொடுத்து சிறையில் தள்ளியிருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











