Don't Miss!
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வீட்டுக்கு மருந்தடிக்க வந்தவருக்கு 'காபி வித் அன்பளிப்பு' தந்த அஜீத்!
தான் வீட்டிலிருக்கும்போது யார் வந்தாலும் அவர்களை அஜீத் உபசரிக்கும் விதமே அலாதியானது.
இப்போது சொல்லப் போகும் சம்பவம் சில மாதங்களுக்கு முன் நடந்தது.
அது ஒரு தீபாவளி சமயம். அஜீத் வீட்டுக்கு பூச்சி மருந்து அடிக்க வந்திருக்கிறார் ஒரு தொழிலாளி. அப்போது அஜீத் வீட்டிலிருந்திருக்கிறார். மருந்தடிக்கும் தொழிலாளி வந்திருப்பதை அறிந்ததும், தானே காப்பி போட்டு எடுத்து வந்து அந்தத் தொழிலாளிக்குக் கொடுத்தாராம்.
அஜீத்தின் இந்தச் செயல் மிகுந்த வியப்பையும், நெகிழ்ச்சியையும் தந்துவிட்டது மருந்தடிப்பவருக்கு. வேலைகள் முடிந்து கிளம்ப எத்தனித்தவரைத் தடுத்து நிறுத்திய அஜீத், அவரைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டார்.
சிறிது நேரம் மருந்தடிப்பவரை நிற்கச் சொன்னவர், உள்ளே போய் பட்டாசுகள், இனிப்பு என தீபாவளிப் பரிசுகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கையில் ரொக்கப் பரிசும் கொடுத்து திக்குமுக்காட வைத்தாராம்.
இந்த விஷயத்தை வெளியில் சொல்லிக் கொள்ள வேண்டாம் என அஜீத் வழக்கமான கட்டளையும் போட்டுதான் அவரை அனுப்பினாராம். ஆனால் சில மாதங்கள் கழித்து இப்போதுதான் தகவல் வெளியாகியுள்ளது.