Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நன்றி கூறிய அஜீத்: உருகி நின்ற சுரேஷ்
சென்னை: ஆசை படத்தில் தனக்கு டப்பிங் பேசிய நடிகர் சுரேஷுக்கு அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
ஆசை படம் அஜீத் குமாருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் அவருக்கு நடிகர் சுரேஷ் டப்பிங் பேசியிருந்தார்.
தனக்காக குரல் கொடுத்த சுரேஷுக்கு அஜீத் குமார் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் ட்வீட் செய்துள்ளார்.
பெரிய விருது
ஆசை படத்தில் டப்பிங் பேசியதற்காக அஜீத் என்னிடம் வந்து நன்றி தெரிவித்தார். அது தான் எனக்கு கிடைத்த பெரிய விருது ஆகும். இது அவருடைய கருணை உள்ளத்தை காட்டுகிறது. நான் பிறருக்காகவும் டப்பிங் பேசியுள்ளேன். சரி விடுங்கள் என்று சுரேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
யாரையும் புகழவில்லை
எனது ட்வீட் எனது மனப்பூர்வமானது. எனது அனுபவங்களில் இருந்து கூறப்பட்டதே தவிர எந்த ஸ்டாரையும் புகழ்வதற்காகவோ அல்லது எந்த ரசிகரையும் நோகடிக்கவோ இல்லை என்று சுரேஷ் தெரிவித்துள்ளார். டப்பிங் என்பது நன்றி கூறப்படாத வேலை. திரைக்கு பின்னால் குரல் கொடுக்கும் ஹீரோக்களுக்காக நான் வருத்தப்படுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பியா பாஜ்பாய்
சுரேஷின் ட்வீட்டைப் பார்த்து பியா பதில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், மிகவும் உண்மை. 2 வரி டப்பிங் பேசியதற்கு எனக்கு ரூ.200 சம்பளம் கிடைத்தது. இதன் மூலம் ஏதாவது நடக்கும் என்ற நம்பிக்கை இருந்ததால் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது வருத்தத்தில் முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.
சின்மயி
சினிமாவில் உள்ள பெரிய நட்சத்திரங்களுக்கு டப்பிங் பேசும் கலைஞர்கள் பல காலமாக மிகக் குறைவான சம்பளமே பெறுகின்றனர் என்று பாடகியும். டப்பிங் கலைஞருமான சின்மயி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.