Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க கீபோர்டில் A and D இடையே உள்ள எழுத்தை மோடி பார்க்கனும்: மா.கம்யூ போராட்டம்
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திடீர் என தாங்க முடியாத வலி: முன்கூட்டியே அஜீத்துக்கு ஆபரேஷன் நடந்தது
சென்னை: சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அஜீத்துக்கு வியாழக்கிழமை இரவு முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடிக்கையில் அஜீத்துக்கு வலது முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. உடனே சிகிச்சை பெற்ற அவர் தொடர்ந்து படத்தில் நடித்துக் கொடுத்தார். அடிபட்ட இடங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
அஜீத்தோ தான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்த பிறகு அறுவை சிகிச்சை செய்ய அவர் முடிவு செய்தார்.
வலி
அடிபட்ட முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அவ்வப்போது வலி இருந்தபோதிலும் அதை பொருட்படுத்தாமல் அவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தார்.
மறுபடியும்
ஏற்கனவே வலியுடன் நடித்து வந்த அஜீத் வேதாளம் படப்பிடிப்பின் கடைசி நாளில் கலந்து கொண்டபோது முன்பு காலில் அடிபட்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டது. இதையடுத்து அவர் ஸ்டிக் உதவியுடன் நடக்க ஆரம்பித்தார்.
ஆபரேஷன்
அஜீத்தை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினர். அவரும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து வரும் 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
திடீர் என
அஜீத்துக்கு திடீர் என வலி அதிகமாகி அவர் துடித்ததால் நேற்று மாலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று இரவு முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தார்
மருத்துவமனையில் இருக்கும் அஜீத்தை அவரது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தார் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள்.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்