Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
அவதூறு செய்தி பரப்புவதா..? ரூ.500 கோடி கேட்டு.. யூடியூபர் மீது நடிகர் அக்ஷய் குமார் வழக்கு!
மும்பை: தன்னை பற்றி யூடியூபில் அவதூறாக கருத்துத் தெரிவித்தவர் மீது ரூ.500 கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார், நடிகர் அக்ஷய் குமார்.
பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இவர் தமிழில், ரஜினி நடித்த 2.0 படத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில், ராகவா லாரன்ஸ் இயக்கிய லக்ஷ்மி பாம் படத்தில் நடித்திருந்தார். இது 'காஞ்சனா' படத்தின் இந்தி ரீமேக்.
சிவாஜியை கலாய்த்து நிகழ்ச்சி நடத்துவதா? நடிகர் பிரபு கோபம்.. 'கலக்கப் போவது யாரு' டீம் மன்னிப்பு!
தனுஷுடன் அட்ரங்கி ரே
இந்தப் படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது. இப்போது பெல்பாட்டம் என்ற இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங், ஸ்காட்லாந்தில் நடந்தது. இதில் ஹூமா குரேசி, லாரா தாத்தா உள்பட பலர் நடிக்கின்றனர். இதற்கிடையே, தனுஷ், சாரா அலிகானுடன் அட்ரங்கி ரே என்ற படத்திலும் நடிக்கிறார்.
500 கோடி அவதூறு
இவர், யூடியூபர் ஒருவர் மீது ரூ.500 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பீகாரை சேர்ந்த யூடியூபர், ரஷித் சித்திக். சிவில் என்ஜீனியரான இவர், யூடியூபில் பரபரப்பு கருத்துகளை தெரிவித்து வருபவர். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து பல பிரமுகர்கள் மீது பரபரப்புகளை கூறினார்.
ஏற்கனவே கைது
இந்த விவகாரத்தில், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, அவர் மகன் ஆதித்யா தாக்கரே பற்றி தவறானக் கருத்துகளை பரப்பியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இவர், சுஷாந்த் சிங் விவகாரத்தில் நடிகர் அக்ஷய் குமாரையும் இழுத்து, அவதூறு தகவல்களை பரப்பினாராம்.
பொய்யான தகவல்
சுஷாந்த் சிங் வளர்ந்து வருவது அக்ஷய்க்குப் பிடிக்கவில்லை என்றும் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி கனடா தப்பி செல்ல உதவ முயன்றதாகவும் ஆத்யா தக்கரேவை ரகசியமாக சந்தித்ததாகவும் பல பொய்யான தகவல்களை தெரிவித்து இருந்தாராம். இதையடுத்து ரூ.500 கோடி கேட்டு அவர் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார், அக்ஷய்.