Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வெளியே போ: செல்ஃபி எடுத்த மாடல்களை திட்டி விரட்டிய இளம் ஹீரோ
ஹைதராபாத்: படப்பிடிப்பு தளத்தில் சில மாடல்கள் அனுமதி இல்லாமல் செல்ஃபி எடுத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் கோபம் அடைந்து அவர்களை திட்டி விரட்டிவிட்டாராம்.
ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் தெலுங்கு படம் துவ்வடோ ஜகன்னாதம். அந்த படத்தில் வரும் திருமண நிகழ்ச்சி காட்சியை படமாக்கியுள்ளனர்.
அந்த காட்சியில் பல மாடல்கள் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது. திருமண நிகழ்ச்சிக்காக அங்கு பிரமாண்ட செட் போட்டிருந்தனர்.
இந்நிலையில் மாடல்கள் செட்டில் நின்று ஆளாளுக்கு செல்ஃபி எடுத்தனர். செட் டிசைன் கசிந்துவிடும் என்று நினைத்த அல்லு அர்ஜுன் கோபம் அடைந்து மாடல்களை திட்டி செட்டில் இருந்து வெளியே விரட்டியுள்ளார்.
அதன் பிறகு கோபத்தை அடக்கிக் கொண்டு செட்டிற்கு உள்ளே செல்ஃபி எடுக்காதீர்கள் தயவு செய்து வெளியே சென்று எடுங்கள் என்று அமைதியாக கூறியுள்ளார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.