Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அமீர்கானின் நிர்வாண போஸ்டர் ஒரு கலை!... சொல்வது சித்தார்த்
சென்னை: ஆமிர்கான் நடித்துவரும் 'பி.கே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பாலிவுட் பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கால் நிர்வாண கோலத்தில் காட்சியளித்த ஆமீர்கான் போஸ்டருக்கு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது.
இந்த போஸ்டர் குறித்து, 'ரங் தே பஸந்தி' படத்தில் ஆமிர்கானுடன் இணைந்து நடித்த சித்தார்த், கருத்து கூறியுள்ளார்.
படத்தை பாருங்கள்
படத்தை பார்த்துவிட்டு அந்த போஸ்டருக்கும் படத்துக்கும் சம்பந்தம் என்னனு தெரிஞ்சிக்கணும்'னு எதிர்ப்பு தெரிவித்த எல்லாரையும் மதித்து ஆமிர்கான் சொல்லியிருக்கார்.
எது ஆபாசம்
ஒரு படத்தின் போஸ்டரை வைத்தே, எந்த ஒரு கருத்தையும் சொல்லிவிடக் கூடாது. ஆபாசம்னு பார்த்தால், ஒலிம்பிக்கில் நீச்சல் உடையில்தான் நீந்துகிறார்கள்.
டிவி சேனலில் ஒளிபரப்புறாங்களே
நேஷனல் ஜியாக்ரஃபி சேனலில் ஆப்பிரிக்காவில் வாழ்பவர்களை காண்பித்தால் அவங்க நிர்வாணமாகதான் இருப்பார்கள். இதைப் பார்த்து குழந்தைகள் துணியை கழட்டிட்டு ஓடப் போறாங்களா? கருத்து சுதந்திரம் என்பது இதில் ரொம்ப முக்கியம். இது ஒரு கலை சார்ந்தது" என்றார்.
நாட்டை திருத்த வரலை
"ஒரு திரைப்படத்தின் மூலம் ஒரு நாட்டை காப்பாற்றி விட முடியாது. நானும் சினிமாவுக்கு நாட்டை திருத்துறவதற்காக வரவில்லை.
கருத்து சுதந்திரம்
இந்த உலகத்துல எதை வேண்டுமானாலும் குறைக்கப் பார்க்கலாம், ஆனால் கருத்து சுதந்திரத்தை மட்டும் பறிக்க நினைக்கக் கூடாது. அதைச் செதுக்கினாலும் சரி, வெட்டினாலும் சரி அது பறிபோயிடும். அப்புறம் யாருமே சினிமாவே எடுக்க முடியாது.
எதிர்ப்பது நியாயமா?
ஒரு கலைஞனுக்கு, கதாசிரியருக்கு எப்பவுமே கருத்து சுதந்திரம் முக்கியம், சினிமாவோட அடித்தளமே அதுதான். இன்றைக்கு ஒருத்தர் ஒரு விஷயம் சொல்றார்... அதை ஒருத்தர் எதிர்க்கும்போது, சில நாட்களில் யாராலும் எதுவுமே சொல்ல முடியாமல் போய்விடும்" என்று தனது ஆதங்கத்தைக் வெளிப்படுத்தியுள்ளார் சித்தார்த்.