Don't Miss!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- News தேர்தலுக்கு முன்பே பாஜகவுக்கு வெற்றி.. அருணாசல பிரதேசத்தில் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
வறட்சி... தண்ணீரில்லாத ஹோலி கொண்டாடுங்கள்: அமிதாப் வேண்டுகோள்
மகாராஷ்டிரா மாநிலத்தில், 1972ஆம் ஆண்டிற்குப் பிறகு இப்போது கடுமையான வறட்சி நிலவுகின்றது. மார்ச் மாதத்திலேயே மக்கள் தண்ணீரைத் தேடி அலையத் தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் வண்ணப் பொடிகளை நீரில் கரைத்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றி மகிழும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்படவுள்ளது..
இப்போதே தண்ணீர்ப் பஞ்சம் ஆரம்பித்து விட்டதால், அனாவசியமாகத் தண்ணீரைச் செலவு செய்யாமல், ஹோலி கொண்டாடும்படி இந்தித் திரையுலகின் பழம்பெரும் நடிகர் அமிதாப்பச்சன் வலைத்தளம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோன்று அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் தண்ணீர் சிக்கனத்தைப்பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்த முயற்சி செய்துகொண்டு இருக்கின்றார்கள். மாணவர்களும் வீதி நாடகங்கள் மூலமும் வீடு, வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதன் மூலமும் மக்களுக்குத் தண்ணீர் சிக்கனத்தைப் பற்றி தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிர அரசும் ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு தண்ணீரைச் செலவழிக்க வேண்டாமென்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
நாக்பூரில், தன்னைத்தானே கடவுளின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் ஆசிரமம் பாபு இடத்தில் ஹோலியின்போது 50,000 லிட்டருக்கு மேல் தண்ணீர் செலவு செய்யப்படுவது விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அத்தகைய கொண்டாட்டத்தை அரசு தடை விதித்துள்ளது.