Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம்: அமிதாப் பச்சன்
மும்பையில் வியாழன்று மாலை பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மும்பையில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் அவமானத்திற்குறிய செயலாகும். இத்தகைய பண்பு வாய்ந்த நம் நாட்டில் இதைபோன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. இது நம் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாம் கொண்டாடும் அனைத்து விதமான விழாக்களும் பெண்களை மதிப்பது எப்படி ? என்பதை நமக்கு கற்றுத் தருகின்றன. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு நாளைக்கு முன்னர்தான் பெண்களை சகோரரிகளாக ஏற்றுக்கொள்ளும் ராக்கி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இனி அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் என்று நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த குற்றத்தை செய்தவர்களை உடனடியாக கைது செய்து விரைவாக உரிய தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.