twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம்: அமிதாப் பச்சன்

    By Mayura Akilan
    |

    Amitabh Bachchan demands strict action against Mumbai gangrape accused
    மும்பை: அனைத்துப் பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாக்க வேண்டும் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மும்பையில் வியாழன்று மாலை பெண் போட்டோகிராபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்தி நடிகர் அமிதாப் பச்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அமிதாப் பச்சன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    மும்பையில் நடந்திருக்கும் இந்த கொடூர சம்பவம் அவமானத்திற்குறிய செயலாகும். இத்தகைய பண்பு வாய்ந்த நம் நாட்டில் இதைபோன்ற கொடூர சம்பவங்கள் நடப்பதை இனியும் நாம் அனுமதிக்கக் கூடாது. இது நம் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

    நாம் கொண்டாடும் அனைத்து விதமான விழாக்களும் பெண்களை மதிப்பது எப்படி ? என்பதை நமக்கு கற்றுத் தருகின்றன. இச்சம்பவம் நடைபெற்ற ஒரு நாளைக்கு முன்னர்தான் பெண்களை சகோரரிகளாக ஏற்றுக்கொள்ளும் ராக்கி திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தோம். இனி அனைத்து பெண்களையும் சகோதரிகளாக நினைத்து பாதுகாப்போம் என்று நாம் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இந்த குற்றத்தை செய்தவர்களை உடனடியாக கைது செய்து விரைவாக உரிய தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    English summary
    Expressing profound grief over the gangrape of a young photojournalist in the city, megastar Amitabh Bachchan on Friday demanded harsh punishment for the perpetrators of the crime.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X