கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஜெயில் மட்டும் பத்தாது.. கொடிய தண்டனை வேண்டும்! - அமிதாப்

டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறாள். இந்த சம்பவம் பற்றி அமிதாப் பச்சன் இன்று தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:
மிகக் கொடூரமான சம்பவம் இது. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன். இரண்டு நாட்களாக குழந்தையை காணமல் பெற்றோர்கள் தவித்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸ் இருந்துள்ளது.
நமது சமூகத்தில் என்ன நடக்கிறது? ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதி வழங்கவேண்டும். குற்றவாளிகளை ஜெயிலில் போடுவது மட்டும் போதாது. அதைவிட கொடூரமான தண்டனைக்கு ஏற்றவர்கள் இவர்கள்.
பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தீவிரவாதத்தை விட கொடுமையானது என்றும் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











