ஐஸ்வர்யா மூலம் பேரன்தான் பிறப்பான்-அமிதாப் பச்சன் நம்பிக்கை!

இதுகுறித்து அவர் தனது பிளாக்கில் கூறுகையில், எனது சகோதரர் மற்றும் எனக்கு அடுத்து, பச்சன் பரம்பரையில் பிறக்கப் போகும் முதல் பச்சன் ஐஸ்வர்யா ராய், அபிஷேக்கின் குழந்தைதான் என்று கூறியுள்ளார் அமிதாப்.
அமிதாப்பச்சனுக்கு ஒரே ஒரு சகோதரர் மட்டுமே இருக்கிறார். அவர் அஜிதாப் பச்சன். மூன்றாவது பச்சன் என்று கூறியுள்ளதன் மூலம் ஐஸ்வர்யாவுக்கு மகன்தான் பிறப்பான் என்று அமிதாப் மறைமுகமாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர் பேரனையே விரும்புவதாகவும் கருதப்படுகிறது.
பேரனோ, பேத்தியோ, அது அமிதாப்பின் பெயர் சொல்லும் பிள்ளையாகத்தான் வளரப் போகிறது. அதை விட முக்கியமாக ஐஸ்வர்யாவின் குழந்தை என்ற எக்ஸ்ட்ரா பெருமையும் கூடவே கிடைக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications











