Don't Miss!
- News அஜித்திற்கு முன்பே நான் வந்துவிட்டேன்.. ஆனால்.. வாக்குச்சாவடியில் போலீசிடம் ஆதங்கப்பட்ட முதியவர்
- Lifestyle வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Finance ஏசி இல்லாம வெளியே போகமாட்டேன்னு சொல்றவங்களா நீங்க? உங்களுக்கு தான் இந்த அப்டேட்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விஜய்க்கு அன்புமணி பாராட்டு
ரஜினியைப் போலவே விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சில தினங்ளுக்கு முன்பு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்று உறுதியளித்தார்.
இதை வரவேற்றுள்ள அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்திலும் விஜய் தீவிரமாக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்புமணி, விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புத் தம்பி விஜய்க்கு வணக்கம். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் புகை பிடிப்பது போல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்த செய்தியினை செய்தித்தாள் வழியாக அறிந்தேன்.
இதற்காக தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தினாலும், புகையிலையை உபயோகிப்பதாலும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
மேலும் இருதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் நோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பெண் சிசுக் கலைப்பு ாகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது அமைச்சகம் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தாங்களும் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார் அன்புமணி.