Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய்க்கு அன்புமணி பாராட்டு
ரஜினியைப் போலவே விஜய்யும் தனது படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கக் கூடாது என்று சில தினங்ளுக்கு முன்பு அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். இதை விஜய்யும் ஏற்றுக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்று உறுதியளித்தார்.
இதை வரவேற்றுள்ள அமைச்சர் அன்புமணி, புகை பிடிக்கும் பழக்கத்திற்கு எதிரான பிரசாரத்திலும் விஜய் தீவிரமாக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்புமணி, விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், அன்புத் தம்பி விஜய்க்கு வணக்கம். எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தாங்கள் இனிமேல் புகை பிடிப்பது போல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று பேட்டி அளித்திருந்த செய்தியினை செய்தித்தாள் வழியாக அறிந்தேன்.
இதற்காக தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுதலையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்தினாலும், புகையிலையை உபயோகிப்பதாலும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் புற்றுநோய் முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.
மேலும் இருதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் நோய், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ், பெண் சிசுக் கலைப்பு ாகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண எனது அமைச்சகம் எடுத்து வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு ஆதரவாக தாங்களும் இணைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார் அன்புமணி.