பட்டாசு வெடிக்கையில் நடிகர் அனில் கபூரின் முடியில் எரிந்த தீ
மும்பை: தீபாவளி அன்று சரவெடி வெடிக்கையில் நடிகர் அனில் கபூரின் முடியில் தீப்பிடித்தது.
பாலிவுட் நடிகர் அனில் கபூர் தனது குடும்பத்தாருடன் மும்பையில் தீபாவளி கொண்டாடினார். அனில் தனது மகளும் நடிகையுமான சோனம் கபூருடன் ரசிகர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். தீபாவளி அன்று இரவு தங்கள் வீட்டு வாசலில் கூடிய ரசிகர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அப்போது அனில் சரவெடியை வெடித்தார். அப்போது அனிலின் தலையில் தீப்பொறிபட்டு முடியில் தீப்பிடித்தது. தீ பிடித்ததால் அனில் கோபம் அடைந்தார். அப்போது சோனம் தான் நிலைமையை சமாளித்தார்.
அனில் தனது மகள்கள் சோனம் மற்றும் ரியாவுடன் ஆமீர் கான் அளித்த தீபாவளி விருந்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications