Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கதைப் பிரச்னை.. விஜய் படத்தில் இருந்து திடீரென விலகினார் ஏஆர் முருகதாஸ்.. அடுத்த இயக்குனர் யார்?
சென்னை: கதையில் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து விஜய் படத்தில் இருந்து இயக்குனர் முருகதாஸ் விலகியுள்ளார்.
விஜய் இப்போது மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இதை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
கொரோனா பரவல்
இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.
முதலில் பாண்டிராஜ்
இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்று பேசப்பட்டு வந்தது. முதலில் பாண்டிராஜ் இயக்கப் போவதாகச் செய்திகள் வந்தன. அடுத்து மகிழ் திருமேனி இயக்க இருப்பதாகக் கூறப்பட்டன. அடுத்து சுதா கொங்கரா இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின.
துப்பாக்கி 2ஆம் பாகம்
பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாகக் கூறப்பட்டது. விஜய்க்காக அவர் கதையை உருவாக்கி வந்ததாகவும் அது, சூப்பர் ஹிட் படமான துப்பாக்கியின் அடுத்த பாகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
கதைப் பிடிக்கலை
முருகதாஸ் உருவாக்கிய கதை விஜய்க்குப் பிடிக்கவில்லை என்றும் கதையை இரண்டு மூன்று முறை மாற்றியும் அவருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். இதுபற்றி விசாரித்தபோது, உண்மைதான் என்பதை சினிமா வட்டாரங்கள் உறுதி செய்தன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் பிரமாண்ட பொருட் செலவில் தயாரிக்க இருந்தது.
சம்பள பிரச்னை
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இருந்தார். படம் தொடங்க இருக்கும்போதே, விஜய்க்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சம்பள பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேறு எந்த இயக்குனர் விஜய்யை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.