Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முதல் முறையாக புலனாய்வு அதிகாரியாக நடிக்கும் அர்ஜூன்!
இதுவரை போலீஸ் அதிகாரி அல்லது ராணுவ அதிகாரியாக நடித்து வந்த அர்ஜுன், முதன்முறையாக புலனாய்வுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அருண் வைத்தியநாதன் இயக்குகிறார்.
இப்படத்தில் அர்ஜுனுடன் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், சுமன், சுஹாசினி மணிரத்னம், வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இதுவரை வெளிவந்த போலீஸ் கதையிலிருந்து மாறுபட்டு முதன்முறையாக புலனாய்வு துறையினை மையமாக கொண்டு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஒரு விறுவிறுப்பு மிக்க ஜனரஞ்சகமான திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தை பேஷன் பிலிம் பேக்டரி சார்பாக உமேஷ், ஜெயராம் மற்றும் சுதன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்கி தொடர்ந்து பெங்களூருவில் நடைபெறவுள்ளது.