Don't Miss!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Finance தீபக் பாரேக் திடீர் ராஜினாமா.. ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்ஷூரன்ஸ் அறிவிப்பு..!!
- Sports உன் ஓவரில் 6 சிக்சர் அடிக்கிறேன் பார்க்குறியா? மனைவியுடன் கிரிக்கெட் விளையாடிய CSK கேப்டன் ருதுராஜ்
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அர்ஜுன் கட்டும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு!
சென்னை: நடிகர் அர்ஜுன் கட்டும் புதிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இன்னொரு பக்கம் இருக்கும். திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் இருக்கிறார்.
ஆன்மீக அர்ஜுன்
அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவம் பெற்றுள்ளது.
சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது 13 ஏக்கர் தோட்டத்தில், ஒரு ஏக்கர் ஒதுக்கப்பட்டு அஞ்சநேயர் கோவில் கட்டப்பட்டு வருகிறது.
35 அடி உயர சிலை
35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப்பட்டது. அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள்.
இரும்புக் கோபுரம்
அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள். அதைப் பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது. பெரிய கிரேன்களை வைத்து தூக்கி நிறுத்தினார்கள்.
தஞ்சை கோபுரம் மாதிரி
தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து அபிசேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அர்ஜுன் தெரிவித்தார்.
விரைவில் குடமுழுக்கு
2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை செய்து கொண்டிருக்கிறோம் விரைவில் குடமுழுக்கு நடத்த உள்ளோம் என்றார் அர்ஜுன்.
நடிகை ஐஸ்வர்யா
கோபுரம் நிர்மாணிப்பதை தொடர்ந்து விசேஷ பூஜை நடந்தது. இதில் நடிகர் அர்ஜுன் அவரது மகள் நடிகை ஐஸ்வர்யா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். கோபுரத்தையும் சேர்த்து ஆஞ்சநேயர் கோவில் 40 அடி உயரத்தில் உருவாகியுள்ளது.