Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
குலு, மணாலியில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய கார்த்தி: உயிர் போய் வந்ததாக உருக்கம்
மணாலி: குலு, மணாலியில் பெரு வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கார்த்தி குலு மணாலியில் சிக்கியுள்ளார்.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தை அடுத்து கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்துள்ள படம் தேவ். படத்தின் சில காட்சிகளை படமாக்க கார்த்தி மற்றும் 140 பேர் அடங்கிய குழு குலு, மணாலிக்கு கிளம்பிச் சென்றது.
இந்நிலையில் குலு, மணாலியில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
மணாலி
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்தாலும் கார்த்தி பத்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளது. மழை சாரலில் படப்பிடிப்பை நடத்த ஆசைப்பட்டு சென்ற இடத்தில் இப்படி சிக்கியுள்ளனர்.
|
படப்பிடிப்பு
நேற்று திடீர் என்று குலு, மணாலியில் நிலைமை மோசமாகிவிட்டது. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் கார், பேருந்து என பல அடித்துச் செல்லப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு ஓடியதை என் கண்ணால் பார்த்தேன். இதை எல்லாம் பார்த்து ஒரு நிமிடம் உயிரே போய்விட்டு வந்தது என்கிறார் கார்த்தி.
கார்
நிலச்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 4 முதல் 5 மணிநேரம் காரிலேயே அமர்ந்திருந்தேன். பின்னர் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று அங்கு தங்கியுள்ளேன். படக்குழுவினரின் நிலையை நினைத்தால் கவலையாக உள்ளது. அவர்கள் எங்கே தங்கி, சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. 23 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பேரழிவால் பல பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
கவலை
காரில் இருந்த நான் பத்திரமாக கிராமத்திற்கு வந்துவிட்டேன். படக்குழுவினர் மலை உச்சியில் சிக்கியுள்ளனர். பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு உணவு கிடைக்காது. பாதைகளை சீர் செய்ய 28 மணிநேரம் ஆகும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதால் தயாரிப்பாளர் லக்ஷ்மணனுக்கு ரூ. 1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கார்த்தி கூறியுள்ளார்.