உதவும் கரங்கள் மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்
நடிகர் அருண் விஜய் தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் மையத்துக்கு சென்று அங்கிருந்த குழந்தைகள் இடையே கொண்டாடினார்.

அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, உணவு வழங்கி, கேக் வெட்டி கொண்டாடினார் அருண் விஜய்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிறந்த நாள் என்பது இல்லாதவர்கள் இடையே நாம் நெருங்கவும் , நம் வாழ்வின், பிறப்பின் அர்த்தத்தை தெரிந்துக் கொள்ளவும் வரும் நாளாகும். இந்த பிள்ளைகள் இடையே இந்த நாளை செலவழிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. என்னுடைய வருகை இவர்கள் இடையே மகிழ்ச்சி தருமானால், மேலும் பல தருணங்கள் இவர்களுடன் இருக்க திட்டமிடுகிறேன்.

என் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான நாட்கள் இன்னும் சிறிது நாட்களில் மலர போகிறது. 'வா டீல்' மற்றும் அஜீத் சாருடன் இணைந்து நடித்து இருக்கும் 'என்னை அறிந்தால்' படங்கள் வெளியாக இருப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது", என்றார்.


Click it and Unblock the Notifications











