Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'காக்கிச்சட்டை' ஆசை அருண் விஜய்யையும் விட்டு வைக்கலையே!
சென்னை: தன்னுடைய சினிமா வாழ்வில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் அருண் விஜய் நடிக்கவிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல வருடங்கள் ஹீரோவாக வலம்வந்த அருண் விஜய்யை, கடந்தாண்டு வெளியான என்னை அறிந்தால் படம் வில்லனாக மாற்றியது.
கேங்க்ஸ்டர் வேடத்தில் 'விக்டராக' நடித்திருந்த அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் சிக்ஸ்பேக் வைத்து அஜித்துக்கு ஈடாக அருண் விஜய் அப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக அறிவழகன் இயக்கும் அடுத்த படத்தில் அருண்விஜய் போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
இதுகுறித்து அவர் "என்னை அறிந்தால் படத்திற்குப்பின் நல்ல படத்திற்காக காத்திருந்தேன். அப்போது அறிவழகன் ஒரு திரில்லர் கதையுடன் என்னை சந்தித்தார்.
அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நான் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இது ஒரு வழக்கமான போலீஸ் கதை கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார்.
கிளீன் ஷேவ் + முரட்டுத் தோற்றம் என்ற ரீதியில் இப்படத்தில் அருண் விஜய்யின் தோற்றம் இருக்குமாம்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியிருக்கிறது. ஈரம், ஆறாது சினம் படங்களைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதையை இயக்குநர் அறிவழகன் கையிலெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.