twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரெண்டு கையிலும் ரத்தக்கறையுடன் சங்கு.. யானை படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!

    |

    சென்னை : தமிழில் ஆக்சன் ஹீரோவாக பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நடிகர் அருண்விஜய் முதன் முறையாக ஹரியின் இயக்கத்தில் யானை படத்தில் நடித்து வருகிறார்.

    தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ஆக்சன் கதைகளில் அமைய இந்த திரைப்படமும் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.

    பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறினாரா நமீதா மாரிமுத்து?... ஏன் என்னாச்சு? பிக்பாஸிலிருந்து பாதியில் வெளியேறினாரா நமீதா மாரிமுத்து?... ஏன் என்னாச்சு?

    தூத்துக்குடி,நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் யானை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சூழலில் இப்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக அருண் விஜய் மிரட்டலான போஸ்டருடன் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    ஆக்சன் ஹீரோ கதைகளை

    ஆக்சன் ஹீரோ கதைகளை

    நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து சில படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இப்போது ஆக்சன் ஹீரோ கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் . தடம், செக்கச் சிவந்த வானம், குற்றம் 23 உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய சூழலில் இப்பொழுது அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.

    முதல் முறையாக யானையில்

    முதல் முறையாக யானையில்

    சூர்யா, விக்ரம், விஷால் என பல முன்னணி நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்து திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர் ஹரி இதுவரை அருண் விஜய்யுடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். இருவரும் நெருங்கிய உறவுக்காரர்களாக இருந்தாலும் எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றாமல் இருந்தனர். இந்த நிலையில் முதல் முறையாக யானை என்ற படத்தில் இணைந்துள்ளனர்.

    அண்ணன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி

    அண்ணன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி

    இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் பக்கா வில்லேஜ் கதை களத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். அண்ணன் கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

    மூன்றாவது கட்ட படப்பிடிப்பு

    மூன்றாவது கட்ட படப்பிடிப்பு

    பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பும் முடிய அடுத்தது மூன்றாம் கட்ட படபிடிப்புக்கு படக்குழு செல்ல உள்ளதை ஓட்டி புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அருண் விஜய் இரண்டு கைகளிலும் சங்கு வைத்திருக்க அந்த சங்கில் ரத்தம் சொட்டுகிறது. மிகவும் வித்தியாசமான மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய இந்த போஸ்டரை வெளியிட்டு படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது என்ற சூப்பரான அப்டேட்டை அருண் விஜய் தற்போது வெளியிட்டுள்ளார்.

    English summary
    Arun Vijay Revealed update on yaanai tamil Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X