Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனி ஒருவனை அடுத்து 15 படங்களில் நடிக்க மறுத்த அரவிந்த்சாமி: ஏன் தெரியுமா?
சென்னை: தனி ஒருவன் படத்தில் நடித்த பிறகு 15 படங்களில் நடிக்க மறுத்துள்ளார் அரவிந்த்சாமி.
அரவிந்த்சாமியின் செகண்ட் இன்னிங்ஸ் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
சித்திக் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படம் மே மாதம் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது.
அரவிந்த்சாமி
ஹேன்ட்சம் ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற வில்லனாக வந்து மிரட்டினார். அரவிந்த்சாமியால் இப்படிக் கூட நடிக்க முடியுமா என்று ரசிகர்கள் மிரண்டு போனார்கள்.
பட வாய்ப்பு
தனி ஒருவன் படத்தில் நடித்த பிறகு அரவிந்த் சாமியை தேடி சித்தார்த் அபிமன்யு போன்ற கதாபாத்திரங்களே வந்துள்ளன. இதனால் அவர் 15 படங்களில் நடிக்க மறுத்துள்ளாராம். ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் அவர் நடிக்க விரும்பவில்லையாம்.
நரகாசூரன்
அரவிந்த் சாமி சதுரங்க வேட்டை 2, கார்த்திக் நரேனின் நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சதுரங்க வேட்டை 2 படத்தில் அரவிந்த்சாமி என்ன தில்லாலங்கடி வேலை பார்த்திருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
செக்கச் சிவந்த வானம்
அரவிந்த்சாமி மணிரத்னத்தின் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, ஜோதிகா என்று நட்சத்திர பட்டாளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.