ஜெயம் ரவியின் தனி ஒருவன்... முதல் முறையாக வில்லனாகிறார் அரவிந்த சாமி!

By Shankar

சென்னை: ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறாராம் அரவிந்த சாமி.

தளபதியில் மணிரத்னத்தால் அறிமுகமாகி, பின்னர் ரோஜா மூலம் பெரிய கதாநாயாக உயர்ந்தவர் அரவிந்தசாமி.

ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து அடியோடு ஒதுங்கினார். வியாபாரத்தில் மும்முரமாக இறங்கினார்.

Arvind Swamy to do the villain role for the first time

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது மறுபிரவேசமும் மணிரத்னம் மூலமே நிகழ்ந்தது. அவர் இயக்கிய கடல் படத்தில் பாதிரியார் வேடத்தில் நடித்தார் அரவிந்தசாமி.

இப்போது முழு வீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்தி - தமிழில் உருவாகும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கும் அவர், தமிழில் ஜெயம் ராஜா இயக்க, ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடிக்கவிருக்கிறார்.

அவர் வில்லனாக நடிப்பது இதுவே முதல் முறை.

பட வாய்ப்புகள் அதிகம் வந்தாலும், அனைத்தையும் ஒப்புக் கொள்ள மறுக்கும் அரவிந்தசாமி, தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவற்றைப் பற்றி அவ்வப்போது ட்விட்டரிலும் எழுதி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X