Don't Miss!
- News பாரதிதாசன் பிறந்தநாளை ‛உலக தமிழ் நாள்’ ஆக கொண்டாடனும்.. அமெரிக்காவில் தமிழ் அமைப்புகள் தீர்மானம்
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Automobiles வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
100% இருக்கைக்கு அரவிந்த்சாமி மறைமுக தாக்கு !
சென்னை : திரைக் கலைஞர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் காத்திருக்க வைத்திருக்கும் திரையரங்குகள் இப்பொழுது முழுவதுமாக திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் 100 சதவீத இருக்கை அனுமதி ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் இன்னும் கொரானா சூழல் முற்றிலுமாக அடங்காத நிலையில் திரையரங்குகள் திறக்கப்படுவது நல்லதல்ல என பலரும் எதிராக பேசி வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகரும் இதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆரிக்கு எதிராக சதி நடக்கிறதா? ஆதாரத்துடன் எடுத்துக் காட்டிய ரசிகர்கள்.. விஜய் டிவியின் பிளான் என்ன?
பொழுது போக்கு
தமிழ்நாட்டில் கொரானா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு முடிவடைகின்ற நிலையில் பொது மக்களின் மிக முக்கிய பொழுது போக்கு அம்சமாக விளங்கி வந்த திரையரங்குகள் தொடர்ந்து மூடிக் கிடக்க எக்கச்சக்கமான திரைப்படங்களும் வெளியாகாமல் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
கொரானா தொற்று
சமீபகாலமாக கொரானா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் பெரும்பான்மையான வணிக நிறுவனங்கள் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்க தொடங்கியிருக்க திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அடுத்தது 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்கலாம் என அரசு அனுமதி அளித்திருந்தது.
தொடர்ந்து நஷ்டத்தை
அரசின் அறிவிப்பின்படி கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கை அனுமதியுடன் செயல்பட்டு வந்த நிலையில் போதுமான அளவு கூட்டம் திரையரங்குகளுக்கு வராததால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கும் தியேட்டர் உரிமையாளர்களின் சார்பாக நடிகர் விஜய் தமிழக அரசிடம் 100 சதவீத இருக்கைகள் கொண்டு திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து அதன்படி அனுமதியும் வழங்கப்பட்டது.
100 சதவீத இருக்கை
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் பலரும் பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் படங்களை பார்க்க ஆவலுடன் இருக்க 100 சதவீத இருக்கை அனுமதிக்கு பல்வேறு தரப்பு ஆதரவு தெரிவித்து வந்தாலும் சிலர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் அரவிந்த் சாமி
இந்த வகையில் நடிகர் அரவிந்த் சாமி 100 சதவீத இருக்கை அனுமதியை மறைமுகமாக எதிர்க்கின்ற வகையில் 100 விட 50 சிறந்தது, என நறுக்குன்னு ஒரு ட்வீட் பதிவை போட, சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து கொண்டே திரையரங்குகளின் இந்த அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த் சாமிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!