Don't Miss!
- News வில்லங்க சான்றிதழ்.. வீடு, மனை வாங்கறீங்களா? பத்திரப் பதிவுத்துறை சர்ப்ரைஸ்.. இனி லேட்டாகாது.. சபாஷ்
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சாதாரன ஆள் இல்லை.. சினிமாவுக்கு கிடைத்த பரிசு.. நெகிழ்ந்த அரவிந்த்சாமி!
இயக்குநர் கார்த்திக் நரேன் சினிமாவுக்கு கிடைத்த பரிசு என அரவிந்த்சாமி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: சினிமாவின் பொக்கிஷம் கார்த்திக் நரேன் நடிகர் அரவிந்த்சாமி புகழ்ந்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் கார்த்திக் நரேன். தமிழ் சினிமா கண்டிராத வித்தியாசமான த்ரில்லர் திரைக்கதை மூலம் முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார்.
இப்போது நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் நரகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன், ஆத்மிகா, சந்திப் கிஷான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியிடப்பட்டது. படம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் அரவிந்த்சாமி, ஊட்டியில் 41 நாட்கள் படப்பிடிப்பு நடந்ததாகவும், பெரும்பகுதி இரவில் ஷூட் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.
மழையையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடந்ததாகக் கூறிய அவர், இயக்குனர் கார்த்திக் நரேன், சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனக் கூறினார்.
முதல் திரைப்படமான துருவங்கள் பதினாறு ரிலீஸ் ஆனபோது, இயக்குனர் மணிரத்னம் உள்பட பலர் கார்த்திக் நரேனைப் பாராட்டினர். இப்போது அவருடைய இயக்கத்தில் நடித்திருக்கும் அரவிந்தசாமி புகழ்ந்துள்ளார்.
இப்படத்திற்கு, ரோன் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார். இம்மாதம் 31ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.