Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'ராஜா ராணி'க்கு மக்கள் தந்த அங்கீகாரம் மகிழ்ச்சி தருகிறது... வாயெல்லாம் பல்லாக ஆர்யா...!
சென்னை: ராஜா ராணி படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யா.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து தயாரித்த படம் 'ராஜா ராணி', ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா நசிம் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை புதுமுக இயக்குநர் அட்லி இயக்கியுள்ளார்.
கடந்த வாரம் வெளியான இப்படம், முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்துள்ளது. இந்த வருடம் வெளிவந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் இப்படம் இதுதான் எனக் கூறப்படுகிறது. மேலும்,ஆர்யாவின் நடிப்பில் வந்த படங்களில் அதிக வசூலைத் தந்தது என்ற பெருமையும் இப்படத்திற்கு சேர்ந்துள்ளதாம்.
இதனால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ஆர்யா ராஜாராணி படத்தின் வெற்றி குறித்து கூறியதாவது...
மிகப்பெரிய வெற்றி....
‘முதல்நாள் ஷூட்டிங்கின் போதே எங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் இப்படம் மிகப் பெரிய வெற்றியைச் சந்திக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.
திரைவாழ்வில் ஒரு மைல்கல்....
ஆனால், என்னுடைய திரையுலக வாழ்வில் இப்படம் இவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் என நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.
மக்கள் ஆதரவு....
இப்படத்திற்கு மக்களிடையே கிடைத்துள்ள ஆதரவு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன்.
குடும்பப்படம்....
வார இறுதி நாட்களில் மட்டுமில்லாது வார நாட்களிலும் குடும்பம் சகிதமாக இப்படத்தைக் காண வரும் கூட்டத்தை பார்க்கையில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாசிட்டிவ் எண்ணங்கள்....
நாங்கள் அனைவரும் எப்போதுமே இப்படம் நிச்சயமாக வெற்றியடையும் என பாசிட்டிவ்வாக எண்ணிக் கொண்டே செயல் பட்டதே இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன்.
காலை வாராத ஸ்கிரிப்ட்....
படத்தின் ஸ்கிரிப்டை நாங்கள் நம்பினோம். அது நிச்சயமாக எங்களைக் கீழே தள்ளி விடாது என்பதில் நாங்கள் மிக உறுதியாக இருந்தோம்' எனத் தெரிவித்துள்ளார்.
வெற்றி நாயகன்....
விரைவில் ஆர்யா நடிப்பில் அஜீத்துடன் ஆரம்பம் மற்றும் செல்வராகவனின் இரண்டாம் உலகம் வெளிவர இருப்பதும் கூட ஆர்யாவின் மகிழ்ச்சிக்கு காரணம் எனச் சொல்லப் படுகிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!