Don't Miss!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விவேக்கின் ஆசையை நிறைவேற்றிய ஆர்யா... நெகிழவைத்த தரமான சம்பவம்!
சென்னை : நடிகர் ஆர்யா விவேக்கிற்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி உள்ளதாக கூறியுள்ளார்.
Recommended Video
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான இன்று மரக்கன்றுகளை நட்டுவைத்த ஆர்யா இவ்வாறு கூறினார்.
8 வயசு.. அப்பா இறந்துட்டாருன்னு தெரியாம எழுப்பினேன்.. அவருதான் என் ஹீரோ.. கண்ணீர் விட்ட அக்ஷரா!
அதே போல விவேக்கின் நினைவாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட உள்ளதாவும் கூறினார்.
அப்துல் கலாமின் பிறந்தநாள்
முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 90வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு மரம் நடுதல் உட்பட பல்வேறு சமூக நலத்திட்டப் பணிகளில் இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் எனப் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மரியாதைக்குரியவர்
நடிகர் விவேக் அப்துல் கலாம் மீது மிகுந்த அன்பு கொண்டவர், அவரின் விருப்பப்படியே மரக்கன்றுகளை நடுவதை தன் வாழ்க்கையில் ஒரு கடமையாக செய்து வந்தார் விவேக்.
மரக்கன்றுகளை நட்டார்
இந்நிலையில் நடிகர் ஆர்யா அகில இந்திய ரசிகர் மன்றம் சார்பாக இன்று செம்மொழிப் பூங்காவில் இரண்டு மரக்கன்றுகளை நட்டார். மரக்கன்று நட்ட பின்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆர்யா, நடிகர் விவேக் அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று மரக்கன்று நட கண்டிப்பாக வரவேண்டும் என்று அழைத்து இருந்தார்.
வாக்குறுதியை நிறைவேற்றினேன்
நடிகர் விவேக் இல்லாதது மிகவும் வருத்தமாக உள்ளது. இருப்பினும், அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாளன்று நான் மரம் நடுவேன் என மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளேன் என்றார்.
விவேக்கின் நினைவாக
அதே போல விவேக்கின் நினைவாக ஆண்டு தோறும் மரக்கன்றுகளை நட உள்ளதாவும் ஆர்யா கூறினார். அதேபோல, அப்துல் கலாம் அவர்களின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் மரக்கன்று நடுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
விவேக் கடைசியாக
விவேக் கடைசியாக, சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, யோகிபாபு, ஆண்ட்ரியான என முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.