Don't Miss!
- News உடைந்து அழுது.. நொறுங்கிய கல்பனா.. பாஜகவை தேசிய அளவில் துரத்தும் "கண்ணீர்".. நிலைமையே மாறுதே
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Sports IPL Classics - டெல்லியை பொளந்த மும்பை அணி.. 146 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கதை
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்!- ஆர்யா
இனி வரும் படங்களில் புகைப் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
"வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' என்ற திரைப்படத்தின் விளம்பரத்திற்காக வெள்ளிக்கிழமை மதுரை வந்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இது என்னுடைய 25-ஆவது படம். ஒவ்வொரு நடிகருக்கும் 25-ஆவது படம் என்பது ஒரு மைல்கல். இதனை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான "ஷோ பீப்பிள்' நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளேன்.
வருகிற 14-இல் படம் வெளிவர உள்ளது.
நடிகர் சங்கத் தேர்தலில் இளைஞர்கள் பொறுப்பு வகிக்க வேண்டும் என்பது மட்டுமே விஷால் அணியின் விருப்பமாகும். இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தால் பல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். இதைக் கருத்தில் கொண்டுதான் நடிகர் சங்கத் தேர்தலில் இளம் நடிகர்கள் போட்டியிடுகிறோம்.
திரைப்படங்களில் நடிகர்கள் மது அருந்துவது, புகைபிடிக்கும் காட்சிகள் கதையின் தேவையைப் பொருத்து அமைக்கப்படுபவை. பொதுமக்கள் யாரும் அவற்றைப் பின்பற்ற வேண்டாம். ஒரு நடிகனாக எனக்கும் சமூக அக்கறை உண்டு. இதைக் கருத்தில் கொண்டு இனி வரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளைத் முடிந்தவரை தவிர்க்க முடிவெடுத்துள்ளேன்," என்றார்.