Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் பச்சன் என்பதற்காக ஐஸ் என்னை மணக்கவில்லை...: மனம் திறக்கும் அபிஷேக்பச்சன்
மும்பை: தான் ஒரு நடிகர் என்பதாலோ அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ, முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தன்னைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என தங்களது திருமணம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிவித்துள்ளார் நடிகர் அபிசேக் பச்சன்.
இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிசேக் பச்சனுக்கும், முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது அத்தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஆரத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் நேற்று முந்தினம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அபிஷேக்பச்சன், தன் காதல் மனைவி ஐஸ்வர்யா ராய் பற்றிக் கூறியதாவது:-
அழகி.... அவள் பேரழகி
என்னை பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய் தான் இந்த பூமியில் மிகவும் அழகான பெண். நான் தினமும் என் முகத்தை பார்த்த கண்ணாடியில் பார்க்கும்போது ஒருவித அச்ச உணர்வு ஏற்படும்.
போட்டி போட விரும்பவில்லை....
காரணம் என் முகம் மிகவும் கொடூரமாக இருக்கும். எனவே நான் அவருடன் போட்டியிட விரும்பவில்லை. அது என்னால் முடியாத விஷயமும் கூட.
மனதால் இணைந்தவர்கள்...
நாங்கள் இருவரும் அழகினால் இணைந்தவர்கள் கிடையாது. ஐஸ்வர்யா ராய் மிகவும் அழகான பெண். சாதாரண மக்கள் அவரை பார்ப்பது அரிது.
நான் பச்சன் என்பதால் அல்ல...
நான் ஒரு நடிகர் என்பதாலோ, அல்லது மிக பெரிய நடிகரின் மகன் என்பதாலோ அவர் என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை.
நானும் அப்டித்தான்...
அதேபோல், நானும், அவர் ஒரு உலக அழகி என்பதால் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை' என இவ்வாறு தங்கள் காதல் வாழ்க்கைக் குறித்து அபிசேக் பச்சன் தெரிவித்தார்.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!