Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
குடித்து கும்மாளமடித்து, பொய் சொல்லி நஷ்டம் ஏற்படுத்தினேனா?: ஜெய் விளக்கம்
சென்னை: பலூன் பட நஷ்டம் குறித்து நடிகர் ஜெய் விளக்கம் அளித்துள்ளார்.
சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்த பலூன் படம் அண்மையில் வெளியானது. ஜெய்யின் மெத்தனத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
ஜெய்
ஜெய் தினமும் குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்ததாகவும், எப்போது பேக்கப் செய்வார்கள் என்பதை எதிர்பார்த்தே சரியாக நடிக்கவில்லை என்றும் தயாரிப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சின்சியர்
என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட தாக்குதல் ஆகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஜெய் விளக்கம் அளித்துள்ளார்.(ஜெய் மெத்தனமாக நடந்து கொண்டதற்கு தங்களிடம் ஆதாரம் உள்ளது என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது).
ஆதாரம்
நான் தினமும் சரியான நேரத்திற்கு ஷூட்டிங்கிற்கு வந்து நடித்துக் கொடுத்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று ஜெய் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர்கள்
நான் எப்படி என்று என்னை வைத்து படம் தயாரித்த அனைவருக்கும் தெரியும். இதுவரை எந்த தயாரிப்பாளரும் என் மீது புகார் கூறியது இல்லை. பலூன் படம் இதுவரை ரூ. 7 கோடி வசூலித்துள்ளது. இது வெற்றிப் படமே என்று ஜெய் கூறியுள்ளார்.