Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!
அதனால்தான் ரஜினி - கமலுக்குப் பிறகு இரட்டை நாயகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வராமலே போயின. அவ்வளவு பெரிய நடிகர்களே எந்த ஈகோவுமில்லாமல் நடித்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தனர்.
ஆனால் இன்று பெரிதாக வாய்ப்பில்லாத சில நடிகர்கள்கூட ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததும், பிணக்கு வந்து மீடியாவிடம் முணக ஆரம்பிக்கிறார்கள்.
சமீபத்தில் சிம்பு நடிக்கும் வானம் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தார் பரத். படத்தின் அறிமுக பிரஸ் மீட்டில் இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தார்கள். சிம்புவுக்கு இணையான ரோல் பரத்துக்கு என்று இயக்குநர் வேறு கூறினார்.
படம் வந்தது. பரத்துக்கு என்ன ரோல் என்பது தெரிந்தும் போனது.
இப்போது பரத் புலம்ப ஆரம்பித்துள்ளார்.
"இந்தப் படத்தில் எனக்கும் சிம்புவுக்கும் சரிக்கு சரியான வேடம் என்று ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படம் முடியும் நேரத்தில் எனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ரிலீஸின்போது, நான் படத்தில் இருப்பதே தெரியாத அளவுக்கு என்னை மறைத்து, ஒருவருக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். எவ்வளவு பெரிய அவமானம், கொடுமை இதெல்லாம். இனி இந்தமாதிரி வாய்ப்புகளை ஏற்கும் முன் யோசிப்பேன்," என்கிறார் பரத்.
இது குறித்து விசாரித்தபோது, "அட போங்க... 'ரோலை'க் குறைத்தாலும் 'பே ரோலில்' கரெக்டாக இருந்தார்களல்லவா.... அதற்காக பரத் சந்தோஷப்பட வேண்டும். இன்றைய மார்க்கெட்டில் அவர் நிலை அதுதான்," என்கிறார் வானம் யூனிட் கலைஞர் ஒருவர்!