சிம்பு.... 'நற நறக்கும்' பரத்!

அதனால்தான் ரஜினி - கமலுக்குப் பிறகு இரட்டை நாயகர்கள் நடிக்கும் படங்கள் அதிகமாக வராமலே போயின. அவ்வளவு பெரிய நடிகர்களே எந்த ஈகோவுமில்லாமல் நடித்து வெற்றிப் படங்களாகக் கொடுத்தனர்.
ஆனால் இன்று பெரிதாக வாய்ப்பில்லாத சில நடிகர்கள்கூட ஒரு படத்தில் சேர்ந்து நடித்ததும், பிணக்கு வந்து மீடியாவிடம் முணக ஆரம்பிக்கிறார்கள்.
சமீபத்தில் சிம்பு நடிக்கும் வானம் படத்தில் இன்னொரு ஹீரோவாக நடித்தார் பரத். படத்தின் அறிமுக பிரஸ் மீட்டில் இருவரும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்தார்கள். சிம்புவுக்கு இணையான ரோல் பரத்துக்கு என்று இயக்குநர் வேறு கூறினார்.
படம் வந்தது. பரத்துக்கு என்ன ரோல் என்பது தெரிந்தும் போனது.
இப்போது பரத் புலம்ப ஆரம்பித்துள்ளார்.
"இந்தப் படத்தில் எனக்கும் சிம்புவுக்கும் சரிக்கு சரியான வேடம் என்று ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படம் முடியும் நேரத்தில் எனக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. ரிலீஸின்போது, நான் படத்தில் இருப்பதே தெரியாத அளவுக்கு என்னை மறைத்து, ஒருவருக்கே முக்கியத்துவம் கொடுத்திருந்தனர். எவ்வளவு பெரிய அவமானம், கொடுமை இதெல்லாம். இனி இந்தமாதிரி வாய்ப்புகளை ஏற்கும் முன் யோசிப்பேன்," என்கிறார் பரத்.
இது குறித்து விசாரித்தபோது, "அட போங்க... 'ரோலை'க் குறைத்தாலும் 'பே ரோலில்' கரெக்டாக இருந்தார்களல்லவா.... அதற்காக பரத் சந்தோஷப்பட வேண்டும். இன்றைய மார்க்கெட்டில் அவர் நிலை அதுதான்," என்கிறார் வானம் யூனிட் கலைஞர் ஒருவர்!


Click it and Unblock the Notifications











