Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மீரா ஜாக்கிரதை... மீண்டும் சர்ச்சையில் பாபி சிம்ஹா!
சென்னை: மீரா ஜாக்கிரதை என்ற படத்தில் நான் நடிக்கவே இல்லை. ஆனால் என் படத்தைப் போட்டு விளம்பரம் செய்கிறார்கள் என நடிகர் பாபி சிம்ஹா நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.
பாபி சிம்ஹா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கோ 2'. இந்தப் படத்துக்கு அடுத்து பாபி சிம்ஹா நடித்த ‘மீரா ஜாக்கிரதை' என்னும் படம் மே 27ம் தேதி வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகியுள்ளது.
ஆனால் இப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து நடிகர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், ‘நான் கடந்த மூன்று வருடங்களாக தென்னிந்த நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். எனது பதிவு எண் 7871. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பொறுட்டு சில நபர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களாக தினசரி நாளிதழில் நான் யார் என்று கேள்வி படாத இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பெயரில் ‘மீரா ஜாக்கிரதை' என்னும் படத்தில் நான் நடித்ததாக விளம்பரம் செய்து வருகின்றனர். மேலும் அந்த விளம்பரத்தில் எனது முந்தைய படமான ‘உறுமீன்' படத்தின் ஸ்டில்களை பயன் படுத்துகின்றனர்.
நான் ‘மீரா ஜாக்கிரதை' என்ற படத்தில் நடித்ததும் இல்லை. டப்பிங் பேசியதும் இல்லை. அந்த படத்தின் கதாநாயகியாக கூறப்படும் மோனிகா அவர்களை நேரில் கூட பார்த்ததும் இல்லை. ஆகவே மேற்படி நான் கூறிய தகவல்களுக்கு தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கித்தறும்படி மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் படத்தை இயக்கியுள்ள கேசவன் மற்றும் அதன் இணை இயக்குமர் மகேஷ் ஆகியோர், இது பாபி சிம்ஹா நடித்த படம்தான் என்று கூறியுள்ளனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு பாபி சிம்ஹா வில்லனாக நடித்த படம் இது என்கிறார்கள் இருவரும்.
பாபி சிம்ஹா இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. ஏற்கெனவே சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் நடித்துவிட்டு டப்பிங் பேசாமல் நிறுத்திவிட்டார். அந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை என்றும் கூறினார். பின்னர் வேறு ஒருவரை வைத்து டப் செய்து படத்தை வெளியிட்டது நினைவிருக்கலாம்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!