Don't Miss!
- News மாமியாரை ஒரே எத்து.. அலேக்கா "தூக்கி" குப்பை தொட்டியில் போட்டாச்சு.. அந்த மகராசியின் பெயர் "லட்சுமி"
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் உங்களுடன் படுத்துக்கட்டுமா?: பிரபல நடிகையிடம் கேட்ட ஐஸ்வர்யா ராயின் கணவர்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜீனத் அமனை பார்த்து நான் உங்களுடன் படுத்துக் கொள்ளவா என நடிகர் அபிஷேக் பச்சன் கேட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் அதாங்க ஐஸ்வர்யா ராயின் கணவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் தான் சிறுவனாக இருக்கும்போது நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியுள்ளார்.
நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது,
எனக்கு 5 வயது இருக்கும்போது என் தந்தை அமிதாப் பச்சனுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்தது. அந்த படத்தில் ஜீனத் அமன் நடித்தார்.
அன்றைய தினம் படப்பிடிப்பு முடிந்த பிறகு இரவில் தூங்க ஜீனத் அமன் தனது அறைக்கு கிளம்பினார். அவரை பார்த்து நீங்கள் தனியாகவா தூங்கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்றார்.
நான் உங்களுடன் வந்து தூங்கட்டுமா என்று கேட்டேன். அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் பெரியவனான பிறகு என்று சிரித்துக் கொண்டே சொன்னார் என்றார்.