ஹீரோ .. ஹீரோ ..
தென்னவன் படம் சரியாக ஓடாவிட்டாலும் கூட, தனது "மக்கள் விழிப்புணர்வு பிரசாரத்தை" விடப்போவதில்லை என்று விஜயகாந்த் தீர்மானமாக கூறி வருகிறாராம்.
தென்னவன் படத்தில் தேர்தல் என்றால் இப்படி நடத்த வேண்டும் என்பது முதற்கொண்டு பல்வேறுஅறிவுரைகளையும், யோசனைகளையும் எடுத்துரைத்துள்ள விஜயகாந்த், அந்தப் படம் சரியாகஓடவில்லை என்பதற்காக கவலைப்படவில்லையாம்.
தனது மைத்துனர் சுதீரைக் கூப்பிட்டு அடுத்த படத்தை உடனடியாக எடுக்கச் சொல்லியிருக்கும்விஜயகாந்த், இந்தப் படத்திலும், நாட்டு மக்களுக்கு நிறைய ஐடியாக்களைக் கொடுக்க உள்ளாராம்.
எந்தக் கால கட்டத்திலும் ஐடியா கொடுப்பதை நிறுத்த மாட்டேன். மக்களுக்கு நிறைய விஷயங்கள்தெரியவில்லை.
எனவே எனது படங்களில் மக்களுக்காக நிறைய கருத்துக்களைக் கூறிக் கொண்டேஇருப்பேன் என்று கூறி வருகிறாராம் விஜயகாந்த்.
இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் ஏராளமான திட்டங்களை அறிமுகப்படுதப்போகிறாராம்.
அப்ப, அண்ணன் தேர்தலில் நிற்கப் போவது உறுதி!


Click it and Unblock the Notifications











