கமல்ஹாசன் மீது கொலை மிரட்டல் வழக்கு
| Click here for more images |
சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். உதவி இயக்குநரான இவர், கமல்ஹாசன் 10 வேடங்களில் நடிக்கும் தசாவதாரம் படத்தின் கதை தனக்குச் சொந்தமானது என்று கூறி வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வழக்கு கீழ் நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில், கமல்ஹாசன் மீது தாம்பரம் குற்றவியல் நீதிமன்றத்தில் செந்தில்குமார் கடந்த 6ம் தேதி ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், கமல்ஹாசன் அடியாட்களை வைத்து என்னை மிரட்டுகிறார். அடியாட்கள் எனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தாம்பரம் நீதிமன்றம், நடிகர் கமலஹாசன், முரளி, கார்த்திக் பிரபு, நிகில் முருகன் மற்றும் அடையாளம் தெரியாத ஏழு பேர் மீது அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய தாம்பரம் போலீஸாருக்கு உத்தரவிட்டது.
அதன்படி போலீஸார் மேற்கண்டவர்கள் மீது வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











