Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோ .. ஹீரோ ..
நடிகர் விஜய் எந்த சூழ்நிலையிலும் அரசியலுக்கு வரமாட்டார். ரசிகர்கள் யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம் என இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ். ஏசந்திரசேகரன் தெரிவித்தார்.
திருப்பூரில் ஏழைகளுக்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பாக ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் விஜய்மற்றும் அவரது தந்தை எஸ். ஏ சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது:
நடிகர்கள் அரசியலில் தலை காட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எப்போதும் யாருக்கும் இருந்ததில்லை. விஜய் எந்தக் காலத்திலும் எந்த சூழ்நிலையிலும்அரசியலில் தலைகாட்ட மாட்டார். எனவே அவரது ரசிகர்கள் பயப்பட வேண்டியதில்லை. அதிர்ச்சியும் அடைய வேண்டியதில்லை. ஒரு நடிகன் என்றமுறையில் அரசியல், மதம், சாதி அடிப்படைகளுக்கு நாங்கள் அடிமையாகி விட மாட்டோம்.
பிறப்பால் கிறிஸ்தவர் என்றாலும், வீட்டை வெளியே வரும்போது மதச் சட்டையைக் கழற்றி விட்டு மனிதன் என்ற சட்டையைப் போட்டுக் கொண்டுதான் வருகிறோம். எங்களுக்கு மனிதர்களாக உள்ள எல்லோரும் தேவை. மனிதர்களாக உள்ள அத்தனை பேரையும் நாங்கள் மதிக்கத் தயாராகஉள்ளோம். எனவே அரசியலில் நுழைய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றார் எஸ்.ஏ சந்திரசேகர்.