Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஒப்பற்ற மகான் சாய்பாபா மீண்டும் அவதரிப்பார்! - சிரஞ்சீவி
புட்டபர்த்தி ஆசிரமத்தில் சாய்பாபா உடலுக்கு நடிகர் சிரஞ்சீவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், "பாபா இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
சாய்பாபா ஆன்மீக பணிகளில் மட்டுமின்றி சமூக சேவைகளிலும் சிறந்து விளங்கினார். நான் சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவரை சந்தித்தேன். அவர் என்னிடம், எப்படி இருக்கிறாய் பங்காரு (தங்கம்)? என்று விசாரித்தார். அப்போது நான் சினிமாவில் எனக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகள் பற்றி கூறினேன்.
அதற்கு அவர், இந்த பிரச்சினை உடனே தீர்ந்து விடும். நிம்மதியுடன் செல் என்றார். அவர் சொன்னபடியே எனது பிரச்சினை உடனடியாகத் தீர்ந்தது. சாய்பாபா போன்ற மிகச் சிறந்த மனிதநேயம் கொண்டவர்களால்தான் இந்தியா வளர்ச்சி பெற்று திகழ்கிறது. அவர் மீண்டும் இந்த உலகில் தோன்றி மக்களை காப்பார்," என்றார்.
பாபாராம் தேவ்: யோகா குரு பாபாராம் தேவ் கூறுகையில், "சாய் பாபாவின் மரணம் உடலுக்கு மட்டும்தான் அவரது ஆன்மாவுக்கு அல்ல. அவரது ஆன்மா என்றும் நம்முடன்தான் இருக்கும். சாய்பாபா ஆன்மீக உலகத்தின் சிறந்த குரு. மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைக்கு நிகரானது என்பதில் மிக உறுதியாக இருந்தவர்.
குடிநீர், மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு சாய்பாபா முக்கியத்துவம் கொடுத்தார். அரசு செய்யாத பணிகளை கூட திறம்பட செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பெற்றார். அவர் விட்டுச் சென்ற பணிகளை தொய்வின்றி தொடர்வதுதான் நாம் அவரது ஆத்மாவுக்கு செலுத்தும் அஞ்சலி.
அன்பை மனிதர்களிடம் போதித்து அதன்படி தானும் நடந்து நல்ல வழிகாட்டியாக விளங்கினார் பாபா. அவரது போதனைகள் படி நடந்து நாட்டின் வளர்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்," என்றார்.