Don't Miss!
- News தென்னிந்தியாவில் பாஜக எத்தனை சீட்களில் வெல்லும்! வந்து விழுந்த கேள்வி.. ரேவந்த் ரெட்டி பளிச் பதில்
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Sports சிஎஸ்கே அணியில் 35 வயது வீரருக்கு கல்தா..வாய்ப்பை வீணடித்ததால் முடிவு.. ரூ.8 கோடி வீரருக்கு வாய்ப்பு
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Lifestyle அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மேடம் நான் நடிக்கப்போகட்டுமா? சோனியாவிடம் பர்மிஷன் கேட்கும் சிரஞ்சீவி
டோலிவுட் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியைத் துவங்கி அரசியலில் குதித்தார். பின்னர் அதை காங்கிரஸ் கட்சியோடு இணைத்துவிட்டார். அரசியலில் இருந்தாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று கடந்த 2009ம் ஆண்டு தெரிவி்ததார். அதைத் தொடர்ந்து தனது 150வது படத்தின் பெயர் அதிநாயகடு என்று அறிவித்து அந்த பெயரை பதிவு செய்தும் வைத்தார்.
ஆனால் அரசியல் பணிகளால் அவருக்கு படத்தில் நடிக்க நேரமில்லை. இதற்கிடையே அதிநாயகடு பெயரை பாலகிருஷ்ணாவுக்கு கொடுத்துவிட்டார். சிரஞ்சீவியின் 150வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ், எஸ்எஸ் ராஜமௌலி, விவி விநாயக், பூரி ஜெகந்நாத் ஆகியவர்களில் யாரேனும் இயக்கக்கூடும் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. இறுதியாக ஷங்கர் தான் இயக்குகிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
இந்நிலையில் அவர் படங்களில் நடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அனுமதி கேட்டுள்ளாராம். நடிப்பதற்கு சோனியா அனுமதிப்பாரா இல்லையா என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.