கடன் தொல்லை?.. போதை பழக்கத்துக்கு அடிமையானாரா விஷால்?.. சித்ரா லட்சுமணன் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஷால் கடைசியாக ரத்னம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக முத்தையாவின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியலுக்கு வருவேன் என்று விஷால் அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் விஷால் குறித்து நீண்ட நாட்களாக பரவிவந்த வதந்திக்கு பத்திரிகையாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் பேசியிருக்கிறார்.
செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்
ரத்னம் விஷால்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருந்தார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்தார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கலவையான விமர்சனம்: அந்த எதிர்பார்ப்போடு சில மாதங்களுக்கு முன்பு ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விஷால் ரசிகர்களும், ஹரியின் ரசிகர்களும் ஆர்வத்துடன் படம் பார்க்க சென்றனர். படத்தின் மேக்கிங்கிலும், திரைக்கதையிலும் ஹரி பட்டையை கிளப்பிவிட்டார் என்று ஒருதரப்பு ரசிகர்கள் கூறினாலும்; இன்னொரு தரப்பினரோ எதிர்பார்த்தபடி இல்லை என்று பேசினார்கள். அதுமட்டுமின்றி சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 மெகா ஹிட்டானதால் ரத்னம் டல்லடித்துவிட்டது.
அடுத்த படம்: அடுத்ததாக குட்டிப்புலி, மருது, கொம்பன், விருமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கிறார் என்றும்; அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் என்று கூறி தனது அரசியல் பிரவேசத்தையும் அவர் அறிவித்திருக்கிறார்.
சித்ரா லட்சுமணன் பேட்டி: இதற்கிடையே விஷாலுக்கு கடன் தொல்லை அதிகமானதால் அவர் போதை பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டார். அதன் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்று தனியார் வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் அதுகுறித்து நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் கேள்வியை முன்வைத்தார். அதற்கு பதிலளித்த சித்ரா, "தனியார் வார பத்திரிகை வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை. அவன் இவன் படத்துக்கு பிறகு விஷாலின் உடல்நிலையில் மாற்றங்கள் உருவானது உண்மைதான். அதிலிருந்தே அவரது பேச்சு, தோற்றம் மாறிவிட்டது. ஆனால் போதைப் பழக்கத்துக்கு அடிமையானார் என்று சொல்வதெல்லாம் அநியாயம்" என்றார்.


Click it and Unblock the Notifications











