Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நான் இறந்து விட்டதாக வதந்தி பரப்பும் திமுகவினர்.. நடவடிக்கை கோரும் நடிகர் செந்தில்!
மதுரை: தான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நடிகர் செந்தில் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் செந்தில் அதிமுக கட்சிக்கு ஆதரவாக, தமிழ்நாடு முழுவதும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார்.
தேர்தல் பிரசாரத்தில் செந்தில் ஈடுபட்டிருந்தபோது அவர் இறந்து விட்டதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் பரவியது. இதனைக் கேட்டு பலரும் அவரைத் தொடர்பு கொண்டபோது இது வதந்தி எனத் தெரிய வந்தது.
இந்நிலையில் மீண்டும் இதுபோல ஒரு வதந்தியை வாட்ஸ் ஆப்பில் பரப்புவதாக செந்தில் புகார் அளித்திருக்கிறார்.இதுகுறித்து அவர் ''இதுபோல நான் இறந்து விட்டதாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமுகவினர் தான் இதுபோல செய்கின்றனர். நல்ல குடும்பத்தில் பிறந்த யாரும் இதுபோல செய்ய மாட்டார்கள். அதனால் நான் மீண்டும், மீண்டும் சொல்கிறேன் இவ்வாறு செய்யாதீர்கள்.
முதல்முறை பொறுத்துப் பார்த்தோம். ஆனால் மீண்டும், அவர்கள் இவ்வாறு செய்வதால் புகார் கொடுக்க வேண்டியதாயிற்று'' என்று கூறியிருக்கிறார்.