Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதல்ல 25 கோடி.. இப்போ மேலும் 3 கோடி.. அள்ளித் தரும் அக்ஷய் குமார்.. ஆச்சர்யத்தில் பாலிவுட்!
மும்பை: கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக பிரதமர் நிவாரண நிதிக்கு 25 கோடி நிதியளித்த அக்ஷய் குமார், மேலும் 3 கோடி நிதியளிக்க முன் வந்துள்ளார்.
Recommended Video
பாலிவுட்டில் கான் நடிகர்களுக்கு சரியான போட்டியாக அக்ஷய் குமார், சமீப காலமாக பல பிளாக்பஸ்டர் படங்களை அடுத்தடுத்து கொடுத்து வருகிறார்.
தமிழில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
செக்ஸ்போஸிங் தேவையில்லை.. உங்களை கொல்ல இதுவே போதும்.. டபுள் மீனிங்கில் கேப்ஷனுடன் சூடேற்றும் நடிகை!
25 கோடி நிதி
இந்தியாவிலேயே கொரோனா நிவாரண நிதிக்காக டோலிவுட் நடிகர்களான பவன் கல்யாண், பிரபாஸ், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, சிரஞ்சீவி உள்ளிட்ட நடிகர்கள் பல கோடி ரூபாய்களை அளித்து வந்த நிலையில், இந்த நேரத்தில் மக்களுக்கு உதவுவது நம்முடைய கடமை என்பதை உணர்ந்த அக்ஷய் குமார் அதிகபட்சமாக 25 கோடி நிதியை PM Careக்கு வழங்கி உள்ளார்.
மேலும் 3 கோடி
ஏற்கனவே இந்திய நடிகர்கள் யாரும் கொடுக்காத அளவுக்கு 25 கோடி நிதியை கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்காக கொடுத்துள்ள நடிகர் அக்ஷய் குமார், தற்போது மும்பை மாநகராட்சிக்கு 3 கோடி நிதியை கொடுக்க முன்வந்துள்ளார். PPE, மாஸ்க்குகள், கொரோனா டெஸ்ட் உபகரணங்கள் வாங்க இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.
கான் நடிகர்கள்
அக்ஷய் குமாரை போலவே பாலிவுட்டில் கான் நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் அமீர் கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களும், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட நடிகைகளும் தங்களால் முயன்ற உதவியை செய்து வருகின்றனர். இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களது பங்கும் அளப்பறியது.
100 கோடி சம்பளம்
அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி திரைப்படம் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிப் போடப்பட்டு இருக்கிறது. மேலும், ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடிக்கும் அட்ரங்கி ரே படத்திற்கு அக்ஷய் குமாருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய மனசு
எவ்வளவு தான் சம்பாதித்தாலும், கொரோனா போன்ற உலகையே உலுக்கக் கூடிய பேரிடர் காலத்தில், அரசுக்கும் மக்களுக்கும் உதவும் நோக்கில், 28 கோடி ரூபாயை கொடுக்க முன் வந்திருக்கும், அக்ஷய் குமாரின் பெரிய மனசை பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!