Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'தீமை'க்கு எதிராக நடுராத்திரியில் போராடிய 'தனி ஒருவன்'!
சென்னை : 'தனி ஒருவன்' படத்திற்குப் பிறகு நடிகர் அரவிந்த்சாமிக்கு வாய்ப்புகள் குவிந்து தற்போது பிஸியான நடிகர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார்.
அவரது கைவசம் 'சதுரங்க வேட்டை 2', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'நரகாசூரன்' போன்ற படங்கள் இருப்பதால் நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார். நடிப்பில் இது அவருக்கு செகண்ட் இன்னிங்க்ஸ்.
இந்நிலையில் விழாக்காலம் என்பதால் நேற்று இரவு முழுவதும் சென்னையில் தொடர்ந்து பட்டாசு வெடிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் தூங்கமுடியாமல் தவித்த அவர் திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார்.
|
பட்டாசு சத்தத்தால் தூங்க முடியவில்லை :
இதுகுறித்து ட்விட்டரில், 'தொடர்ந்து பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சத்தத்தால் தூங்க முடியவில்லை. திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
|
மறுபடியும் மொதல்லருந்தா:
'சிறுது நேரம் சத்தம் நின்ற நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை அதிகாரிக்கு போன் செய்து நன்றி தெரிவித்தேன். மீண்டும் பட்டாசு வெடிப்பதைத் துவங்கிவிட்டனர்.'
|
வேற யார் தடுக்குறது? :
'இப்படி நள்ளிரவில் பட்டாசு வெடிப்பதை போலீஸ் தடுக்கவில்லை என்றால் யார் செய்வார்கள்?' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
இதைத்தான் பண்ணனும் போல :
'எல்லோரும் வேலை செய்வதையும், குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்குப் போவதையும் விட்டுவிட்டு இவர்களுடன் விழாவைக் கொண்டாட வேண்டும்போல... அப்படித்தான் நினைக்கிறேன்' என ஆதங்கத்தோடு தெரிவித்திருக்கிறார் தனி ஒருவன் அரவிந்த்சாமி. 'தீமை தான் வெல்லும்...' எனப் பேசியவருக்கு வந்த சோதனையைப் பாருங்க...