ஹீரோவாகும் கூல் ஜெயந்த்

பிரபு தேவா, ராஜூ சுந்தரத்தைத் தொடர்ந்து மேலும் சில டான்ஸ் மாஸ்டர்கள் நடிக்க வந்தாலும் ஹீரோவாய் தலையெடுத்ததில்லை. விதிவிலக்காக கூல் ஜெயந்த் களமிறங்குகிறார்.
அவருக்கு ஜோடியாக ரூபஸ்ரீ, சிந்தூரி என 2 நாயகிகள் நடிக்கிறார்கள். பெஞ்சமின் இயக்கும் இப்படத்தை ஆல்மைட் கம்பைன்சின் கே.ஏ.பாலன் தயாரிக்கிறார்.
இளைஞர்களின் உணர்வுகளையும், ஒற்றுமையையும் நல்வழிப்படுத்தினால் நல்லதொரு சமுதாயம் உருவாகும் என்பதே இந்த படத்தின் கதையாம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கேரள பகுதிகளான குளச்சல், முட்டம் ஆகியப் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.
கே.ஏ.பாலனுக்கு ரொம்ப துணிச்சல்!


Click it and Unblock the Notifications











