Don't Miss!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏப். 10ல் தசாவதாரம்!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரிண்டுகள் இப்படத்திற்காகப் போடப்படவுள்ளதாம்.
கமல்ஹாசன் முதல் முறையாக 10 வேடங்களில் மிரட்டியுள்ள தசாவதாரத்தின் படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் படு வேகமாக நடந்து வருகின்றன. படத்தில் கிராபிக்ஸ் வேலைகளுக்குத்தான் அதிக வேலை இருக்கிறது என்பதால் அந்தப் பணிகளை பல்வேறு சாப்ட்வேர் நிறுவனங்களிடம் பிரித்துக் கொடுத்து அவற்றை முடுக்கி விட்டுள்ளனர்.
படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் உள்ள நிலையில் ஏப்ரல் 10ம் தேதி படம் திரைக்கு வருவதாக ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில், தமிழ்ப் புத்தாண்டுக்கு நான்கு நாட்கள் முன்னதாக ஏப்ரல் 10ம் தேதி உலகம் முழுவதும் தசாவதாரம் திரையிடப்படவுள்ளது.
சில புதிய ஏரியாக்களில் நானே சொந்தமாக திரையிடவுள்ளேன்.
படம் திரைக்கு வரும்போது இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலும் விடுமுறைக் காலமாகும். எனவே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு படத்தை பெரிய அளவுக்கு கொண்டு செல்லும். தமிழ்த் திரையுலக வரலாற்றில் பெரும் சாதனை படைக்கும் என்று திடமாக நம்புகிறேன் என்றார் அவர்.
கிராபிக்ஸ் வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கியுள்ளதாம். படத்தின் ஆடியோவை முற்றிலும் வித்தியாசமான முறையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தவும் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளாராம்.