Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தனுஷையும் கவிழ்த்த சுரேஷ்கிருஷ்ணா!
பாபா மூலம் ரஜினிக்கு மறக்க முடியாத அடியைக் கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா இப்போது அவரது மருமகன் தனுஷுக்கும் செமத்தியான அடியைக் கொடுத்துள்ளார்-பரட்டை என்கிற அழகுசுந்தரம் மூலமாக.
குதுப்மினார் போல உயர்ந்து நின்றிருந்த ரஜினியின் மார்க்கெட்டை, பைசா நகர கோபுரம் போல சாய்த்து சரித்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாபா என்ற ஒற்றைப் படம் மூலம் ரஜினியை சரித்து விட்டவர் சுரேஷ் கிருஷ்ணா.அந்த சரிவிலிருந்து ரஜினியால் மீள முடியுமா, சூப்பர் ஸ்டார் அவ்வளவுதானா என்றெல்லாம் கேட்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது. அந்த அளவுக்கு ஆணித்தரமான சரிவைக் கொடுத்த சுரேஷ்கிருஷ்ணா இப்போது ரஜினியின் மருமகன் தனுஷுக்கும் செமத்தியான சரிவைக் கொடுத்திருக்கிறார்.
கன்னடத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற படம் ஜோகி. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்தால், அதில் தனுஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார் ரஜினி. இதையடுத்து அப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினார் இயக்குநர் கேயார்.
டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் தனுஷ், மீரா ஜாஸ்மின் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் ராஜு சுந்தரம் மாற்றப்பட்டர். சுரேஷ் கிருஷ்ணா இயக்குநரானார்.
படம் வேகமாக வளர்ந்து முடிந்தது. ரிலீஸ் ஆகப் போகும் நேரத்தில் சம்பளப் பாக்கி வைத்து விட்டார் கேயார் என பிரச்சினையைக் கிளப்பினார் தனுஷ். பின்னர் இதுவும் ஒரு வழியாக சரியாகி படமும் ரிலீஸ் ஆனது.
ஆனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லாமல் படு சொதப்பலாக இருப்பதால் பிளாப் வரிசையில் சேர்ந்துள்ளதாம். திரைக்கதையில் வேகமோ அல்லது லாஜிக்கோ இல்லை. தனுஷின் தீவிர ரசிகர்களுக்குக் கூட படம் பிடிக்காமல் போய் விட்டதாம்.
ஒரிஜினல் படத்தில் இருந்த பெப் இப்படத்தில் இல்லை. கதையை சொதப்பலாக படமாக்கி விட்டார் சுரேஷ்கிருஷ்ணா என தனுஷ் தரப்பு படு அதிருப்தியாக உள்ளதாம்.
பாபா படத்துக்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா சந்திக்கும் 4வது பிளாப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பரட்டை சுருட்டையாகி விட்டதால் தனுஷ் குட்டிச் சேரில் சுருண்டு உட்கார்ந்து நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கிறாராம்!