இந்தி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கும் தனுஷ்
மும்பை: ஆர். பால்கியின் இயக்கத்தில் இந்தி படத்தில் நடித்து வரும் தனுஷ் காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் வருகிறார்.
ராஞ்ஹனா படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார் தனுஷ். அவரது முதல் இந்தி படமே ரூ 100 கோடி வசூல் செய்தது. மேலும் அந்த படத்திற்காக தனுஷுக்கு பல விருதுகள் கிடைத்தது.

இந்நிலையில் அவர் ஆர். பால்கியின் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கமல் ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டின் மெகா ஸ்டாரான அமிதாப் பச்சனும் இந்த படத்தில் நடிக்கிறார்.
படப்பிடிப்பு கடந்த 3 மாதங்களாக நடந்து வருகிறது. படத்தில் துணை நடிகராக வரும் தனுஷுக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காதாம். இது தனுஷ் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் ஆகும்.
ராஞ்ஹனாவை போன்று இந்த படத்திலும் தனுஷ் நடிப்பில் பின்னி பெடல் எடுப்பார் என்று பாலிவுட் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications











