Don't Miss!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- News சின்னம் என்னனே தெரியல.. பிரச்சாரத்தில் சுணங்கிய திமுக கூட்டணி.. திருச்சியில் வேகம் எடுக்கும் அதிமுக!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நான் தேடும் செவ்வந்தி பூ இது… இளையராஜா முன் பாடி அசத்திய தனுஷ்
மும்பை: மும்பையில் இளையராஜாவின் சாதனைக்காக நடைபெற்ற விழாவில் அவரது பாடல்களில் சிலவற்றினை நடிகர் தனுஷ் பாடினாராம். இதைக்கேட்ட இளையராஜா தன்னைவிட சிறப்பாக பாடுவதாக கூறி பாராட்டியுள்ளார்.
பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஷமிதாப்' படத்தின் இசை வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இதுவரை 1000 படங்களுக்கு மேல் இசையமைத்ததற்காக, இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாகவும் இந்நிகழ்ச்சி அமைக்கப்பட்டது.
இவ்விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். இசை வெளியீட்டு விழா மேடையில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் மூவருமே இளையராஜாவின் இசைக்கும் தங்களுக்குமான நெருக்கத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
விழாவில் பேசிய தனுஷ், "நான் ஒரு தேர்ந்த நடிகன் அல்ல. திரையுலகில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். இளையராஜா இசை இல்லாமல் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.
இசையோடு வாழ்கிறேன்
திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய இசையோடுதான் வாழ்கிறேன். ஒவ்வொரு காட்சியுமே உங்களுடைய இசை தான்.
மறக்க முடியாது
ரஜினி சார் இந்த விழாவிற்கு வந்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இம்மாதிரியான விழாவை இனிமேல் என்னுடைய திரையுலக வாழ்வில் எதிர்பார்க்க முடியாது" என்றார்.
நான் பாடும் செவ்வந்தி பூ இது
விழா மேடையில் தனுஷை பாட சொல்லி இயக்குனர் கேட்டார், முதலில் அவர் தயங்கினாலும், 'தென்பாண்டி சீமையிலே, நான் தேடும் செவ்வந்தி பூ இது' ஆகிய பாடல்களைப் பாடி அசத்தினார்.
நல்லா பாடுறியே
நான் பாடிய பாட்டுக்களை என்னை விட நன்றாக பாடுகிறாய் என இளையராஜா கூறினார்.
பதட்டமா இருக்கேன்
உடனே சந்தோசப்பட்ட தனுஷ், சார் நானே பதட்டத்துல இருக்கேன், நீங்க வேற ஏன் சார்' என தமிழில் பேசினார். விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு தமிழ் புரியாவிட்டாலும் இருவரின் உரையாடலை கேட்டு ரசித்து சிரித்தனர்.