Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'கொடி'ய பறக்க விடுங்கப்பா!- ரசிகர்களிடம் 'சரண்டரான' தனுஷ்!! #dhanushkraja #Kodi
தொடரி படத்தின் தோல்வியும், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் வளர்ச்சியும் தனுஷை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது.
இறங்கி வந்தால்தான் மரியாதை கிடைக்கும் என்பதை உணர்ந்து மீடியாக்களுக்கு முக்கியத்துவம் தரத் தொடங்கியுள்ளார். ட்விட்டர் போதும் என்று முன்புபோல அல்லாமல் எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்துப் பேசுகிறார். இந்த மாற்றத்தின் அடுத்த கட்டமாக ரசிகர்கள் பக்கமும் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்.
ஒரு படத்தின் ஓப்பனிங் எனப்படும் முதல் இரண்டு நாட்களுக்கான கூட்டத்துக்கு ரசிக மன்றங்கள் மிக மிக அவசியம். அதில் கவனத்தை செலுத்தத் தொடங்கியிருக்கிறார் தனுஷ். தொடரி படத்தின் ஓப்பனிங்கை பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
முதல் கட்டமாக தமிழ்நாடெங்கும் இருக்கும் ரசிக மன்றங்களின் மாவட்ட செயலாளர்களை நேற்று அழைத்துப் பேசியிருக்கிறார். இதில் தீபாவளிக்கு வெளியாகும் கொடி படத்தை எந்த வகைகளில் புரமோஷன் செய்து ஹிட் ஆக்கலாம் என்று விவாதித்திருக்கிறார்களாம்.
என்ன செய்தாலும் படம் நல்லாருந்தாதான் ஓடும். இதை இந்த ஹீரோக்கள் எப்ப புரிஞ்சுக்க போறாங்களோ?